siruppiddy

15/4/15

பெரும்பான்மை! ஏற்றுக்கொள்ள முடியாதென்கிறார் சுரேஸ்!!!

 நான்கு கட்சிகளது கூட்டமைப்பான தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்குள் தனியொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அதில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்தேசியகூட்டமைப்பின் ஒதுக்கீடுகளில் 51வீதம் தமிழரசுக்கட்சிக்கும், ஏனைய 49 வீதத்தை மூன்று கட்சிகளும் பகிர்ந்து கொள்ளட்டும் என்றும் அவ்வாறான நிலைப்பாட்டிற்கு சம்மதித்தாலே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றிலேயே கைச்சாத்திடுவதென தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழரசுகட்சயின் ஆலோசனையினை
 நிராகரித்துள்ளார். நான்கு கட்சிகளது கூட்டமைப்பான தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்குள் தனியொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஏற்றுக் கொள்ளமுடியதென தெரிவித்த அவர் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களென்ற 
வகைப்படுத்தல் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதொன்றெனவும் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சிக்கு 51 வீத ஒதுக்கீடு தேவையென்ற தீர்மானத்தை தமிழரசுக்கட்சியின் மாவட்டக்கிளையொன்று தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் கூடி எடுக்கும் தீர்மானங்களே இறுதியானவை. மாவட்டக்கிளைகள் எடுக்கும் தீர்மானங்கள் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணைந்து தமிழரசுக்கட்சிக்கு இரண்டு வரைபுகளை வழங்கியுள்ளோம். அதில் கட்சிகள் அனைத்திற்கும் சமஅந்தஸ்தை கோரியுள்ளோம். எனவே தனியொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோமெனவும் அவர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக