siruppiddy

2/12/13

திறைசேரி அரச வங்கிகளிடம் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபா பணத்தை பெற்றுள்ளது

2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வரை இலங்கை திறைசேரி அரச வங்கிகளிடம் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபா பணத்தை மேலதிக பற்றாக பெற்றுள்ளது.

இது இலங்கையின் தேசிய உற்பத்தியில் 1.2 வீதமாகும். இதனை தவிர சீனா, ஜப்பான், பிரித்தானியா ஆகிய நாடுகளிடம் இருந்தும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடம் இருந்தும் 109 கோடி அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசாங்கத்தின் திறைசேரி அரச வங்கிகளிடம் இருந்து பெற்றுள்ள மேலதிக பற்று காரணமாக அரச வங்கிகள் இயங்குவதில் கூட சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து வருவதாக அரசாங்கம் கூறினாலும் நாட்டின் பொது நிறுவனங்கள் பல நஷ்டத்தில் இயங்கி வருவதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக