siruppiddy

12/12/13

போரில் மடிந்த அனைவரையும் நினைவு கூரும் நாள் பிரகடனப்படுத்தப்பட

 இலங்கையில் நல்லிணகத்தை கொண்டு வரவேண்டுமானால்ää கடந்த 30 வருடங்களில் போர் காரணமாக இறந்தவர்களுக்காக பொதுவான அஞ்சலி நாள் அனுஸ்டிக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் யோகராஜன் இந்தக் கருத்தை நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
பயங்கரவாதிகளை தோற்கடித்ததாக கூறி இலங்கையில் மே 19 ம் திகதி வெற்றிவிழா கொண்டாடப்படுகிறது.
இது வெறுக்கத்தக்க செயல். இது இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக முரண்பாடுகளையே வளர்க்கும்.
எனவே போரின் போது கொல்லப்பட்ட படையினர் விடுதலைப்புலிகள் பொதுமக்கள் என்று அனைவரையும் நினைவுக்கூரும் வகையில் பொது அஞ்சலி நாள் ஒன்றை பிரகடனப்படுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எனினும் இதனை சரியாக விளங்கிக்கொள்ளாத ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்லää விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்துக்கு அங்கீகாரம் வேண்டுமா? என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பினார்.
எனினும் அதனை மறுத்த யோகராஜன்ää இலங்கையின் தமிழ் ஊடகங்கள்ää நல்லிணக்கத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிடுகின்றன.
எனினும் சிங்கள ஊடகங்கள் இதனை செய்யவில்லை என்று குற்றம் சுமத்தினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக