siruppiddy

22/12/13

வடக்கு மாகாண அரசுடனும் இணக்க அரசியல் நடத்த விரும்புகிறாராம் டக்ளஸ்!

 மத்திய அரசுடன் மட்டுமல்லாது மாகாண அரசுடனும் இணக்க அரசியலை முன்னெடுக்கவே நாம் விரும்புகின்றோம். இணக்க அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென்பதை நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ்க் கட்சிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்பதுடன் நாம் மத்திய அரசுடன்

 மட்டுமல்லாது மாகாண அரசுடனும் இணக்க அரசியலை முன்னெடுக்கவே விரும்புகின்றோம்.
மாகாணசபை என்ற கனவுக் குழந்தை இன்று நனவாகியுள்ளது. இதனை பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டியதே முக்கிய பொறுப்பாகும். இணக்க அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென்பதை நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.அந்த வகையில் அதற்கான

சந்தர்ப்பம் உருவாக்கப்பட வேண்டுமென்பது மட்டுமன்றி உருவாக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தையும் நாம் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனொரு கட்டமாகவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு வடக்கு மாகாண முதமைச்சருக்கு நாம் அழைப்பு விடுத்திருந்த போதிலும், தவறான புரிந்துணர்வு காரணமாக அவர்கள் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்த போதிலும் எமது முயற்சிகள் தொடரும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக