siruppiddy

27/4/14

இன்டர்போலுக்கு உதவ நோர்வே இணக்கம்

நோர்வேயில் இருப்பதாக கூறப்படும் நெடியவன் என்ற சிவபரனை கைது செய்ய இன்டர்போல் பிறப்பித்துள்ள பிடிவிராந்துக்கு உதவ நோர்வே முதல் முறையாக இணக்கம் வெளியிட்டுள்ளது. நெடியவனை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நோர்வே இராஜாங்க செயலாளர் மோரன் ஹொன்லபட் தெரிவித்துள்ளதாக திவயின குறிப்பிட்டுள்ளது. நெடியவன் பயங்கரவாதத்திற்காக நிதி திரட்டியுள்ளதாக நெதர்லாந்து பொலிஸார் உறுதிப்படுத்தி, 6000 ஜிகாபைட் இரகசிய தகவல்களை நோர்வே

அரசாங்கத்திடம் சமர்பித்துள்ளமையே இதற்கான காரணமாகும். கோனிக் என்ற நடவடிக்கையின் கீழ் நெடியவன் நிதி திரட்டிய விதம் பற்றி அறிந்து கொண்டதாக நெதர்லாந்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். நெடியவனின் சகாக்களான கோபி, தேவியன், அப்பன் ஆகியோர் அண்மையில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக