siruppiddy

4/4/14

பயங்கரவாதிகள் உருவாதை தடுக்கவே வடக்கில் இராணுவம்!

முப்பது வருட காலமாக நிலவிய பயங்கரம் மீண்டும் உருவாகாமல் தடுக்கவும் பயரங்கரவாதிகள் மீண்டும் உருவாகாமல் தடுக்கவுமே இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டுள்ளனர் என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று முல்லைத்தீவில் தெரிவித்தார்.
கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் கட்டப்பட்ட 101 வீடுகளின் திறப்புக்களை மக்களிடம் கையளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது விமானப்படையால் அபகரிக்கப்பட்ட காணிகளில் இருந்து 29 காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

இராணுவத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வடக்கிலிருந்து  அகற்றப்போவதில்லை என்று தெரிவித்த கோத்தபாய அதற்காக யாருடைய அச்சுறுத்தலையும் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மீண்டும் புலிகள் உருவாகாமல் இருக்க  இராணுவத்தினர் வடக்கில் அவசியம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவமுகாம் ஒரு பிரதேசத்தில் இருந்தால் அந்தப் பிரதேசத்தின் வருமானம் அதிகரிக்கும் எனத் தெரிவித்த கோத்தபாய இங்கு மொழிப் பிரச்சினை காரணமாகவே இராணுவத்திற்கும் மக்களுக்கும் நல்ல உறவில்லை என்றும் தெரிவித்தார். இதற்காக ஜனாதிபதி மும்மொழிகளையும் கற்பிற்குடம் முயற்சியில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மக்கள் இராணுவத்தினருடன் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மக்களும் இராணுவமும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடனும் நெருக்கத்துடனும் பழக வேண்டும் என்றும் அதன் மூலம் மீண்டும் பயங்கரவாதம் உருவாகாமல் தடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்குச் சென்ற கோத்தபாய அங்கும் ஒன்பது வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக