siruppiddy

16/4/14

இயக்குணர் குமரன் பத்மநாதன்`ஆண்கள் சிறுவர் இல்லம் திறப்பு! `

 கிளிநொச்சி திருவையாறு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட செஞ்சோலை ஆண்கள் சிறுவர் இல்லம் இன்று புதன்கிழமை (16.04.2014) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இல்ல கட்டடத்தினை கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜென்ரல் சுதந்த ரணசிங்க, யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் உதய பெரேரா மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக பீட பீடாதிபதி கலாநிதி கே.தேவராஜ் ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.

இந்த இல்லத்தில் உணவு விடுதி, தங்குமிட விடுதி, பொழுதுபோக்கு விடுதி மற்றும் அலுவலகம் என நான்கு பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் இயக்குநர் குமரன் பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக பீட பீடாதிபதி கலாநிதி கே.தேவராஜ், சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜென்ரல் சுதந்த ரணசிங்க, யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, கௌரவ விருந்தினர்களாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் விஸ்வரூபன், கிளிநொச்சி மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் கே.முருகவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
*நிகழ்வின் இறுதியில் கலை நிகழ்வுகள் நடைபெற்றன *

0 கருத்துகள்:

கருத்துரையிடுக