siruppiddy

24/6/14

மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நிகழ்வு

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

முன்பதாக பாடசாலையின் பிரதான வாயிலிலிருந்து மாணவர்களின் இசை அணிவகுப்புடன் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து தேசியக் கொடியும், பாடசாலைக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டன.

அடுத்து மகிந்தோதய தொழில்நுட்பப் பீடத்துக்கான அடிக்கல்லினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாட்டி வைத்ததுடன் இந்நிகழ்வுக்கான நினைவுக்கல்லினையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.

பாடசாலை அதிபர் செல்வி கிறேஸ் தேவதயாளினி தேவராஜா தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

60 மில்லியன் ரூபா செலவில் குறித்த தொழில்நுட்பப்பீடம் ஆறுமாத காலத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக