siruppiddy

28/6/14

பொய்க் குற்றச்சாட்டுகளை தயார் செய்கிறது அரசாங்கம் !!

 விடுதலைப் புலிகளுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் தயார் செய்து வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். சில முஸ்லிம்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் உள்ளதாக கூறப்படும் மனித புதைக்குழியை தோண்ட இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகள் தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அவை குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் குருக்கள் மடத்துக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியிருப்பதானது விடுதலைப் புலிகளுக்கு எதிராக திட்டமிட்டே அரசாங்கம் பொய்க் குற்றச்சாட்டுகளை தயாரித்து வருகிறது என்பதை எடுத்துக் காட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக