siruppiddy

2/9/14

கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் அரசாங்கம்!

வடமாகாணத்தின் அரசாங்க நிறுவனங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகள் துரிதப்பட்டு வருகின்றன.
இதன்படி வடமாகாணத்தில் உள்ள அரச காரியாலயங்கள், திணைக்களங்கள் போன்றவற்றில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 
அவர்களின் பதவிகளுக்கு துரிதமாக தென்னிலங்கையில் இருந்து சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 
வடமாகாணத்தை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
ஏற்கனவே கிழக்கு மாகாணத்தின் அரச காரியாலயங்களில் இவ்வாறு அதிக அளவில் சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக