siruppiddy

29/9/14

அரசாங்க உதவிகள் ஒன்றும் தேவையில்லை .எனக்கு பிள்ளை வந்தாலே போதும்!

வவுனியா அகிலன் லொச்சில் வேலை செய்து கொண்டிருந்த தனது மகனை 2009.01.08 திகதி வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டனர் என ஆணைக்குழு முன் தாயொருவர் சாட்சியமளித்தார்.
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் முழங்காவில் மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதன்போதே தாயொருவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,
சமாதான காலத்தில் முழங்காவிலில் இருந்து எனது கணவரது ஊரான யாழ்ப்பாணம் போய் விட்டோம். வறுமை காரணமாக மகன் வவுனியா அகிலன் லொச்சில் இரவு நேரம் வேலைக்குப் போய் வந்தார்.அந்த வருமானத்தில் தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம்.
பின்னர் 2009.01.08 ஆம் திகதி வெள்ளைவானில் வந்தவர்களால் எனது மகன் கடத்திச் செல்லப்பட்டார் என முதலாளி என்னிடம் தெரிவித்தார். பல சிரமங்கள் பட்டு வவுனியாவுக்கு சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.
ஆனால் வவுனியா குறித்த காலப்பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அன்று வெள்ளை வானில் வந்தவர்களும் இராணுவ சீருடையிலும் சிவில் உடையிலும் தான் வந்திருந்ததாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர்.
நாங்கள் எல்லா இடமும் பதிவுகள் செய்து தேடி விட்டோம் ஆனால் பதில் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது கணவரும் என்னை விட்டு போய் விட்டார். நான் மகன் வருவான் என்று புது வீடும் கட்டிவிட்டு காத்துக் கொண்டு இருக்கின்றேன்.
எனது மற்றப்பிள்ளைகள் தான் பண உதவிகள் செய்கின்றனர். எனக்கு அரசாங்க உதவிகள் ஒன்றும் தேவையில்லை. பிள்ளை வந்தாலே போதும் உயிருடன் பிடித்துச் சென்ற பிள்ளை உயிருடன் தானே இருக்க வேண்டும். எனக்கு எனது மகன் வேண்டும் என்றார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக