siruppiddy

13/3/14

தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு ஜனாதிபதிக்கு எதிராக..

 ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய உட்பட அதன் உறுப்பினர் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் இன்று முறைப்பாடு செய்தனர்.

ஜனாதிபதி அரச தலைவராக தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவே அவர் பிரசாரங்களில் கலந்து கொள்ள வேண்டும் அவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கூறியுள்ளனர்.

ஜனாதிபதி அரச தலைவருக்கான அரச வளங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஆளும் கட்சியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் உட்பட சில வேட்பாளர்களின் இலக்கங்கள் நிகழ்ச்சி ஒன்றில் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் அரசியல் அதிகாரம், அரச வளங்களை நாட்டின் தலைவர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாகவும் தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் சம்பந்தமாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளருடான சந்திப்பில் கரு ஜயசூரியவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, விஜேதாச ராஜபக்ஷ, மங்கள சமரவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக