siruppiddy

16/3/14

ஒசாமா பின் லேடனை போல் பிரபாகரனை பார்க்க வேண்டும்:

ஜெனிவாவில் சில நாடுகளின் நடவடிக்கைகளை பார்க்கும் போது அந்நாடுகளின் இரட்டை நிலைப்பாடுகளை காணக் கூடியதாக உள்ளது என அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஒசாமா பின் லேடனைபோல் ஒரு பயங்கரவாதியாகவே பார்க்க வேண்டும்.

ஜெனிவாவில் விடுதலைப் புலிகளின் தலைவரின் படங்களை ஏந்தியவாறு தமிழர்கள், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை யாரும் எதிர்க்கவில்லை.

இதே போன்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒசாமா பின் லேடனின் ஆதரவாளர்களினால் நடத்தப்பட்டிருந்தால், பெரும்பாலான நாடுகள் அதனை கடுமையாக எதிர்த்திருக்கும்.

அதேவேளை ஜெனிவா மனித உரிமை பேரவையில் எந்த சவால் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவே உள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் நாடுகளுடன், அதனை சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன் படிப்படியாக அந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக