siruppiddy

6/3/14

விசாரணைப் பொறிமுறையை கனடா உறுதிப்படுத்த வேண்டும்!

  ஐ.நா. மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கைக்கு கடுமையான செய்தியைச் சொல்வதாக இருக்கவேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணை நடத்துவதற்கு சர்வதேச பொறிமுறை அவசியம் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையரின் பரிந்துரையை உறுதிப்படுத்துவதாக அந்தப்

பிரேரணை வாசகம் அமைய வேண்டும். அதற்காக கனடா தான் சார்ந்த நாடுகளோடு கலந்துரையாடி தீவிர முயற்சி எடுக்கவேண்டும். இவ்வாறு கனடா நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சு மீதான விமர்சனத்துக்கு உத்தியோகபூர்வமாகப் பொறுப்பான எதிர்கட்சி எம்.பி. போல் டிவரும் மனிதஉரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான எதிர்க்கட்சி எம்.பி. வெயின் மார்ஸ்டனும் கனடா அரசைக் கோரியிருக்கின்றனர்.
  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக