siruppiddy

26/3/14

ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பு!

அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ள நாடுகளின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்க தீர்மானம் மற்றும் நவநீதம்பிள்ளையின் அறிக்கை வெளிவந்த நிலையில் அதன் நிலமை மற்றும் இதனது தாக்கம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மகாநாடு பாராளுடன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தலைமையில் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடக்கும் மண்டபத்திற்கு அருகில் இடம் பெற்றது.

 இவ் ஊடகவியலாளர் மகாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் இவ் ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்களால் பலதரப்பட்ட வினாக்களும் தெடுக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக