siruppiddy

2/10/14

பல்லைக்கழகத்தில் கலைப்பீட மாணவர்கள் போராட்டம்!

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.பல்கலைக்கழத்தில் நடைபெற்ற முடிந்த மாணவர் ஒன்றியத் தேர்தலில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனக் கூறி கலைப்பீட மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
1. மாணவர் ஒன்றியத் தேர்தலை மீண்டும் நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. மாணவர் ஒன்றியப் பிரதிநிதி பக்கச்சார்பாக நடக்கிறார்.
3. குறித்த பிரச்சினைக்கு துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. காலையில் தேர்தல் அறிவிப்பு மாலையில் தேர்தலா?
போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, துணைவேந்தருக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக