siruppiddy

20/3/15

48 மணிநேரதிற்குள் விசாரிக்கும் சட்டத்துக்கு கூட்டமைப்பும் ஆதரவு

சந்தேகநபர்களை 48 மணி நேரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய வழிசெய்யும் குற்றவியல் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததுடன், அந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் நேற்று நடத்தப்பட்டது.
இதன்படி இந்த பிரேரணை 53 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெயர்கூறி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 53 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்ததுடன் முன்னிலை சோஷலிசக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார மாத்திரம் எதிராக வாக்களித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன் ஆகியோரும் இதற்கு ஆதரவளித்தனர். இதன்படி குற்றவியல் சட்டக்கோவையின் குறித்த பிரேரணை 53 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக