siruppiddy

15/8/15

வழி மீது விழி கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் ..!

வலியோடு
இவர்கள்
பெரும் பகுதி
கழிந்ததும்\
கழிவதும்
கழியப் போவதும்
எழுதாத விதியாகும்..!

அன்றொரு நாள்
காதலனுக்காய்
கடிதக்காரனுக்காய்
பத்திரிகை! பால்
காரனுக்காய்
க.பொ.த பரீட்சை
முடிவுக்காய்
கால் கடுக்கக்
காத்திருப்பு..!

பிறிதொரு நாளில்
கைப்பிடித்தவன்
வருகைக்காய்
மல்லிக்கைப்
பூவுக்காய் புன்னகை
பூத்த படி
கனவுகளோடு
காத்திருப்பு..!

அராஜகத் தாண்டவம்
தலை விரித்தாடிய
வேளைகளில்
காரியாலயத்தால்
கணவன் வரவில்
தப்பேதும் நடந்திடக்
கூடாதெனும்
ஏக்கச் சுமைகளோடு
காத்திருப்பு…

இன்று பிள்ளைகளின்
வருகைக்காய்
எண்ணங்கள்
விரிந்தோடக்
கண்ணீரில்
காலமெல்லாம்
காத்திருப்பு.
வழி மீது
இவர்கள் விழி.
வாழ்வெல்லாம்
நீள்கின்றதே..!
பெண்மையின்
பேரழகு இதுmmmm..

ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக