siruppiddy

26/8/15

ஜோடிகள்.கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் .!

 மௌன
மொழி
மெல்லிய
நாணம்.
சற்று சலனம்
பறக்கும்
நிலை
மயக்கும்
மாலை
மனங்களின்
ஊமை நாட்டியம்
மாயம்
காயம்
தாண்டிய
தெய்வீகம்
காதலாகி
நிதம் கண்ட
கனவுகள்
ஓராயிரம்..!

எண்ண அலை
தெளிவான
நீரோடை
அழகிய
முடிவும்
முகமலர்வும்
உணர்வுகளின்
உராய்வில்
சத்தங்கள்
இல்லாத
இதழ் யுத்தங்கள்
இனிமை சேர்க்கும்
இனிய இரவுகள்
வாரி அணக்கும்
வசந்தங்கள்
வாழ்க்கையில்
தனி சுகம் காணும்
ஜோடிகள்..! 
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக