siruppiddy

7/8/15

குண்டு துளைத்த காருடன் ஊர் ஊராகப் பிரசாரம் செய்யும் பொன்சேகா!

ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று திருகோணமலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருகோணமலை நகரசபை
 மண்டபத்தில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில் பீல்ட் மார்ஷல் 
சரத் பொன்சேகா பங்கேற்றிருந்தார்.
இதன்போது, 2006ஆம் ஆண்டு கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில், தன் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது,
 தான் பயணம் செய்த காரையும் அவர் தேர்தல் பரப்புரைக்காக கொண்டு வந்திருந்தார். குண்டுகள் துளைத்த அந்தக் காரை வைத்து அவர் ஒவ்வொரு மாவட்டமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக