siruppiddy

18/8/15

நினைத்தாலே இனிக்கும்.கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின்.!

சிந்தையில்
எங்களூர் சந்தை.
வருடங்கள் 
தாண்டினாலும்
மறக்காத முகங்கள்….!

கலகலப்பானவர்
ஆனாலும் மிகவும்
கண்டிப்பானவர்கள்.
அன்பானவர்கள்
ஆனாலும்
அதட்டக் கூடியவர்.!

மீனைக் கூறியும்
கூறாமலும் விற்கும்
திறன் வாய்ந்தவர்.
இரக்கம் நிறைந்தவர்
ஆனாலும் சொன்ன
விலையில் நின்று
இறங்காதவர்…!

நியாயம் விலையில்
நிறைய இருக்கும்
அறா விலை கேட்டால்
அறம் பாடத் தொடங்குவர்
ஆனாலும் நல்லவர்….!

நாசூக்கான நக்கலும்
நளினமும் கேட்டு
நாணிக்குறுக வைத்திடும்
வல்லவர்..விலை
கேட்டவர் வாயடைப்பார்.
சொன்ன விலைக்கு
பெற்று விட்டால்
குட்டி மீனொன்றினை
இனாமாய் தந்திடுவார்.
இவர்கள் முகம்….
நினைத்தாலே இனிக்கிறது
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி



இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக