siruppiddy

12/11/13

இசைப்பிரியாவின் தாயாரும் சகோதரிகளும் { காணொளி,}



தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான இசைப்பிரியா தொடர்பிலான இசைப்பிரியாவின் தாய் மற்றும் இரு சகோதரிகள், இசைப்பிரியா தொடர்பிலும், இறுதிப் போர் தொடர்பிலும் கண்ணீர்மல்க பகிர்நத அனுபவகள் அக்காட்சியில் ஒளிபரப்பப்ட்டிருக்கின்றது. ஒரு உடன்பிறந்த சதோரரியை இலங்கை இராணுவ வல்லாதிக்கத்தின் மூா்க்கத்துக்கு பலிகொடுத்த அக் குடும்பத்தினரது கண்ணீர்க் கதை இன்று உலகை உலுக்கும் பதிவாக வெளிவந்துள்ளது.
   
தமிழீழ விடுதலை புலிகளின் தொலைக்காட்சி பிரிவில் செய்தியாளராக பணியாற்றிய இசைப்பிரியா..
சிங்கள காடையர்களின் வன்மத்துக்கு உள்ளாகி மரணமடைந்தார் . அவர் கடைசி நிமிடங்களில் இராணுவத்தினரின் மத்தியில் நாதியற்று நின்ற காட்சி சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்களை புலம் போட்டு காட்டியுள்ளது . இறுதிக் கட்ட போரில் இசைப்பிரியா போன்று எத்தனையோ பெண்கள் இராணுவத்தின் பிடியில் சிக்குண்டு மடிந்து போயினர் .
அக் காணொளிகளையெல்லாம் வெளியிட நேரிடின் இலங்கை அரசின் ஈவு இரக்கமற்ற தன்மையை கண்டு சர்வதேசமே கண்ணீர் சிந்த வேண்டிய நிலை வரும் . போரால் சொந்தமிழந்து , சொத்திழந்து நின்றது போக எம் பெண்கள் மானமும் இழந்து நிற்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர் . அவற்றையெல்லாம் பறை சாற்றும் முகமாக வெளிவந்த இசைப்பிரியாவின் காணொளி தீர்வொன்றை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் எம்மவர்கள் விடிவுக்காய் காத்துக்கொண்டுள்ளனர் .
பத்து மாதம் சுமந்த தாய் காணக்கூடாத காட்சியொன்றை இசைப்பிரியாவின் தாய் கண்டுள்ளார் . தன் மகளுக்கு நேர்ந்த கதியை மனதில் உள்ள சோகங்களை சனல் 4 இடம் பகிர்ந்து கொண்டுள்ளார் . மரணத்தின் பின்னும் தன்னினத்தின் விடிவுக்காய் பாடுபடும் வீர மங்கையின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திப்போம்..
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக