siruppiddy

28/11/13

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ள சுவிஸில் மாவீரர் தின நிகழ்வுகள்


சுவிட்சர்லாந்து நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ள மாவீரர் தினம் எழுச்சியுடன் ஆரம்பமானது. அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்தார்.

 பொதுச் சுடரினை இன்றைய நிகழ்வின் சிறப்பு அதிதி தமிழ் நாட்டில் இருந்து வருகைதந்த வீரசந்தானம் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தாயக விடுதலையில் தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் பெற்றார் உறவுகள் தொடர்ந்து சுடரேற்றி நிகழ்வு தாயக உணர்வுகளுடன் நடந்து வருகிறது.











 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக