siruppiddy

4/11/13

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்தஞ்சையில் திறப்பு:

                              
தஞ்சையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சியில், உலக தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
”வரலாற்றுச் சிறப்பு மிக்க முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு நிகழ்ச்சி வருகிற 8 ஆம் தேதி தொடங்கி, 3 நாட்கள், தஞ்சை, விளார் சாலையில் அமைந்துள்ள முத்துக்குமார் திடலில், பாலச்சந்திரன் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

மூன்று நாள் நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்காக விளார் சாலையில் உள்ள நினைவு முற்றத்தின் அருகிலேயே பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த பந்தலிலேயே நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கலந்து கொள்பவர்கள் தங்குவதற்குத் திருமண மண்டபங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வரும் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறப்பு விழா தொடங்குகிறது. ஈழ கவிஞர் காசி ஆனந்தன் கொடியேற்றி வைக்கிறார். முனைவர் ம.நடராஜன் தலைமையில் நான் (பழ.நெடுமாறன்) திறந்து வைக்கிறேன். வைகோ, தா.பாண்டியன், பொன்.ராதாகிருஷ்ணன், இரா.இளவரசு, த.வெள்ளையன், சுப.உதயகுமார், தஞ்சை அ.ராமமூர்த்தி, பெ.மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

மலேசிய துணை அமைச்சர் வேதமூர்த்தி வி.ஐ.டி.வேந்தர், ஜி.விசுவநாதன், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்ழக துணை வேந்தர் பொன்னவைக்கோ, விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் சுண்முகசுந்தரம் ஆகியோர் நூல்களை வெளியீட்டு உரையாற்றுகிறார்கள்.
2ஆம் நாள் நிகழ்ச்சி

இரண்டாம் நாள் நிகழ்ச்சியான 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் மாணவர் அரங்கத்திற்கு சி.தினேஷ் தலைமை வகிக்கிறார். செம்மியன் தொடங்கி வைக்கிறார். காலை 11 மணிக்கு நடைபெறும் மகளிர் அரங்கத்திற்கு முனைவர் கல்பனா தலைமை தாங்குகிறார். ம.பொ.சி. மாதவி பாஸ்கரன் தொடங்கி வைக்கிறார். மாலை 3 மணிக்கு நடைபெறும் பாவலர் அரங்கிற்கு இன்குலாப் தலைமை தாங்குகிறார். த.பழமலய் தொடங்கி வைக்கிறார்.
மாலை 5 மணிக்கு நடைபெறும் அறிஞர் அரங்கிற்கு முனைவர்

இரா.இளங்குமரனார் தலைமை தாங்குகிறார். முனைவர் தமிழண்ணல் தொடங்கி வைக்கிறார். மாலை 7 மணிக்கு நடைபெறும் பொது அரங்கிற்கு இரா.நல்லகண்ணு தலைமை தாங்குகிறார் சா.சந்திரேசன் தொடங்கி வைக்கிறார். இதில் சீமான், டாக்டர் கிருஷ்ணசாமி, கொளத்தூர் மணி, வேல்முருகன், குடந்தை சோ.அரசன் உள்பட பலர் உரையாற்றுகின்றனர்.
3ஆம் நாள் நிகழ்ச்சி

மூன்றாம் நாள் நிகழ்ச்சியான 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் உலகத் தமிழர் அரங்கத்திற்கு நீதி நாயகம் கே.சந்துரு தலைமை வகிக்கிறார். மலேசியா இரா.திருமாவளவன் தொடங்கி வைக்கிறார். பகல் 11.30 மணிக்கு நடைபெறும் அறிஞர் அரங்கத்திற்கு முனைவர் க.ப.அறவாணன் தலைமை தாங்குகிறார். திருவாவடுதுறை ஆதீன இளவரசு தொடங்கி வைக்கிறார்
. மாலை 3 மணிக்கு நடைபெறும் பிற மாநிலத் தமிழர் அரங்கிற்கு சி.ராமமூர்த்தி தலைமை தாங்குகிறார். முனைவர் தமிழப்பன் தொடங்கி வைக்கிறார்.

மாலை 5 மணிக்கு நடைபெறும் திரைத்துறை அரங்கிற்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை தாங்குகிறார். கலைப்புலி தாணு தொடங்கி வைக்கிறார். நடிகர்கள் சத்தியராஜ், சிவக்குமார், ராஜேஷ், இயக்குநர்கள் பாலுமகேந்திரா, வெ.சேகர், தங்கர் பச்சான், ஆர்.கே.செல்வமணி, சேரன் உள்பட பலர் உரையாற்றுகின்றனர்.

மாலை 7 மணிக்கு நடைபெறும் பொது அரங்கிற்கு கி.த.பச்சையப்பன் தலைமை தாங்குகிறார். சேலம் மு.பாலசுப்பிரமணியம் தொடங்கி வைக்கிறார். இறுதியாக நான் (பழ.நெடுமாறன்) நிறைவுரையாற்றுகிறேன்.
இந்த மூன்று நாட்கள் நிகழ்ச்சியில் தமிழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக