siruppiddy

7/11/13

கைக்குண்டுகளும் துப்பாக்கி ரவைகளும் பொலிஸாரால் மீட்பு

                                 

யாழ்.கொடிகாமம் பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து பத்திற்கும் மேற்பட்ட கைக்குண்டுகள் உட்பட ஒருதொகுதி துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் புகையிரத நிலைய வீதிக்கு அருகிலுள்ள அன்ரனி என்பவருக்கு சொந்தமான

காணியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்தே இவற்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த கிணற்றினை தூர்வாறுவதற்காக இறைத்த போதே குறித்த வெடி பொருட்கள் வெளிப்பட்டதாகவும் இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அவை மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழ்.கோப்பாய் பகுதியில் கைவிடப்பட்ட பற்றைக்காணியிலிருந்து நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக