siruppiddy

14/9/15

மாசிலா நயினைவிஐயனின் தியாகத்தின் நெடும் பயணம்

ஆத்மாவில் ஆணிகள்
அறையப்படும் 
மானம் மரியாதை 
பணத்தால்
அளக்கப்படும்
காற்றுவெளியிடை
கண்ணீர் நிறைக்கும்
இதயத்தை கூறுபோட
எத்திசையும் முயலும்
எற்றும் இறக்கும்
சிந்தனைச்சிறகுகள்
ஒடியும் ஒடிக்கப்படும்
உள்ளொளி பரப்பி
இறையுணர்வு பரவும்
காலச்சக்கரம் அத்தனையும்
அள்ளிச்செல்லும்
மீண்டும் கொட்டும்
தீப்பொறியில் இதயம் சிக்கும்!
திரும்பும் பக்கமெல்லாம்
சிதறிக்கிடக்கும் !
துரோகங்கள் துரத்தும்
நிணங்கள் துழைக்கும்
காலம் கனியும்
மீண்டும் கருக்கும்
சொந்தங்கள்
சொல்லாமல் போகும்
தீயிடை வீழ்ந்த
புழுவாய்த் துடித்து
அக்கினிக்குஞ்சாய்
அகிலம் வெளிக்கும்
தியாகத்தின் பாதை
கண்டவனன்றி
வெற்றுவெளிகள்
விளைச்சல் தரா
விண்ணிலன்றி
புட்கள் பறா
கண்ணீர் சொரியும்
அதைக்கண்களே
உள்வாங்கும் !
தியாகத்தின் பாதை
தியாகிக்கே புதிராகும்

ஆக்கம் கவிஞர்  மாசிலா நயினைவிஐயனின்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக