siruppiddy

1/9/15

ரி.தயாநிதியின் எல்லையில்லாத் தொல்லை..!

தொலைதூரத்
தொடர்புகளுக்காய்
தொலைபேசிகள்
உருவான போதும்
கால ஓட்டதில்
கைபேசிகளாகின..!..

வியாபரச் சந்தையில்
கிளம்பிய போட்டிகளால்
மலிவாவகவும்
இலவசவமாகவும்
கட்டண மாற்றங்கள்.!

அவசர அழைப்புக்கள்
அநாவசிய அழைப்பாகி
பேசிடக் கதையின்றி
அமைதியைத் தாண்டி
ஆத்திரமூட்டி இன்று
அநாமதய அழைப்புக்களாகி
சமுக்கத்தில் சர்ஜை..!

விஞ்ஞான வளர்ச்சியால்
மேலும் பல தொல்லைகள்
படப்பிடிப்பும் மிரட்டலும்
ஒலிப்பதிவும் உறுத்தலும்
சுயமான படமெடுப்பும்
என மாறி சுகம் தொலைந்தது..!

நிதானம் இழப்பதனால்
மானம் இழக்கின்றோம்
அவதானம் இன்மையால்
அவமானப் படுகின்றோம்
அரட்டையைக் குறைத்து
அளவோடு அளவளாகுதல்
அவசியமானதன்றோ..!
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக