siruppiddy

5/9/15

சர்வதேச விசாரணையை போர்க்குற்றங்களை விசாரிக்க தேவை!

தமிழ் இன அழிப்புத் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொள்­வ­தற்கு உள்­ளக விசா­ர­ணையில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. சர்­வ­தேச விசா­ர­ணையே வேண்டும். அதுவே எமது மக்­களின் நிலைப்­பாடு என யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொண்ட அமெ­ரிக்க செனட் சபை உறுப்­பி­னர்­க­ளிடம் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் 
வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
நேற்று பிற்­பகல் 1.30 மணி­ய­ளவில் அமெ­ரிக்­காவின் செனட் சபை உறுப்­பி­னர்கள் ஐந்து பேர் கொண்ட குழு முத­ல­மைச்­சரை அவ­ரு­டைய வாசஸ்­த­லத்­தில் ­சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டியது. இத­னை­ய­டுத்து
 குறித்த சந்­திப்புத் தொடர்பில் முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­வித்­த­தா­வது,
யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொண்ட அமெ­ரிக்க செனட் உறுப்­பி­னர்கள் ஜன­வரி 8 ஆம் திகதி இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் நாட்டில் ஏற்­பட்ட மாற்றம் தொடர்பில் கேள்வி எழுப்­பினர்.
உண்­மையில் ஜன­வரி 8 ஆம் திக­திக்குப் பின்னர் தேசிய மட்ட ரீதியில் மாற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கலாம். ஆனால், தமிழ் மக்­களைப் பொறுத்­த­ளவில் நீண்­ட­கா­ல­மாக காணப்­பட்டு வரும் பிரச்­சி­னை­க­ளுக்கு எது­வித நன்­மையும் தீர்வும் எட்­டப்­ப­ட­வில்லை என்­பதை குறிப்­பிட்­டி­ருந்தேன்.
குறிப்­பாக தமி­ழர்கள் வாழும் பகு­தி­களில் அதி­க­ள­வான இரா­ணுவ பிர­சன்னம் மற்றும் தமி­ழர்­க­ளுக்குச் சொந்­த­மான பல ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­ப­டாமல் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தமை என்­ப­வற்றை குறிப்­பிட்­டி­ருந்தேன்.
மேலும் தொடர்ச்­சி­யாக மத்­திய அர­சாங்கம் அதி­கா­ரங்­களை தன்­ன­கத்தே வைத்­துள்­ளது. அதனை மாகாண சபைக்களுக்குப் பகிர்ந்து கொடுக்­க­வில்லை என்­பதை அவர்­க­ளுக்கு சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன். மேலும் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் 
உள்­ளக விசா­ரணை கொண்­டு­வ­ரப்­பட்டால் அவற்­றுக்கு எதிர்ப்பு தெரி­விப்­பீர்­களா என அவர்கள் என்­னிடம் கேள்வி எழுப்­பினர். போர்க்­குற்­றங்கள் தொடர்பில் தமிழ்­ மக்­களைப் பொறுத்­த­வரை உள்­ளக விசா­ர­ணையில் நம்­பிக்­கை­யில்லை. அத்­த­கைய நிலைப்­பாட்­டிலே வட­மா­கா­ண­ச­பையும் 
உள்­ளது.
இந்­நி­லை­யி­லேயே வட­மா­காண சபையில் சர்­வ ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­திய பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது. போர்க்­குற்­றங்கள் தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாக சர்வ­தே­சத்­தடன்
 இணைந்த உள்­ளக­ வி­சா­ர­ணையே கொண்­டு­வ­ரப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத்­தகைய நிலையில் எமது மக்கள் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் உயிரி ழந்துள்ளமைக்கு உள்ளக விசாரணை மூலம் எத்தகைய நீதியும் கிடைக்காது.

அவற்றில் எமக்கு நம்பிக்கையில்லை என்ற நிலை யிலேயே சர்வதேச விசாரணை வேண்டும் என அவர் களுக்கு தெரிவித்ததுடன் இதற்கான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கவேண்டும் என அவர்களிடம் கேட் டுக்கொண்டேன் என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக