siruppiddy

6/10/13

முதலில் நானே13ஆவது திருத்தத்தை பாதுகாக்க


13ஆவது திருத்தத்தை பாதுகாக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் முதன் முதலில் நானே குரல் கொடுத்தேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்குரிய வீடு

அமைப்பதற்காக உபகார கொடுப்பனவை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.
உலக குடியிருப்பு தினத்தையொட்டி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் அதன் மட்டக்களப்பு

மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் முரளிதரன்,
13ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுப்பதற்கு முதல் நானே குரல் கொடுத்தேன். 13ஆவது திருத்ததை பாதுகாக்க வேண்டுமெனும் நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன். அதற்கு ஆதரவாகவே நான் பேசினேன்.

தமிழ் மக்களின் உரிமைக்காகவே போராடச் சென்றவன் நான். அதில் எனது சகோதரனையும் இழந்தேன். அதேபோன்று நீங்களும் உங்கள் சகோதரர்களையும் பிள்ளைகளையும் இழந்துள்ளீர்கள்.

இன்று வடிவத்தை மாற்றி நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் கல்வி இவைகள் இரண்டும் முக்கியமானதாகும். இவைகள் இன்று அபிவிருத்தியடைந்து வருகின்றன. இன்று நமக்கு எந்த தடைகளும் கிடையாது. சோதனைச் சாவடிகள் மற்றும் கெடுபிடிகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு விட்டன.

வட மாகாண சபை தேர்தல் சுதந்திரமாக நடைபெற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்யவுள்ளார். அதற்காக அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். ஜனாதிபதி முன்னிலையில் அவர் முதலமைச்சராக சத்தியப்பிரமானம் செய்வது இந்த நாட்டினுடைய அரசியலமைப்பாகும். தனிப்பட்ட அரசியல் கருத்து அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக