siruppiddy

17/10/13

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கொள்வனவு செய்ய

 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்ய முயன்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கனேடிய தமிழரான பிரதீபன் நடராஜா ஒப்புக்கொண்டுள்ளார். ஒன்ராரியோ பிராம்டனை சேர்ந்த அவர் கடந்த வாரம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக, அமெரிக்க நீதிமன்றப் பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
   
இவருக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் திகதி தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக 1 மில்லியன் டொலர் பெறுமதியான உயர் சக்திவாய்ந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து அனுப்ப, பிரதீபன் நடராஜாவும் அவரது சகாக்களும் முயன்றதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவருடன் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இன்னொரு கனேடியத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராஜா கடந்த ஜுலை மாதம் தன் மீதான குற்றசாட்டுகளை ஒப்புக்கொண்டிருந்தார். பிரதீபன் நடராஜாவுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக