siruppiddy

11/10/13

வடபகுதி பயணிகளிடம் கப்பம்பறிக்கும் கும்பல்!


 வட பகுதியிலிருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்புக்குச் செல்லும் தனியார் பேருந்துக்களில் கப்பம் கோரும் கும்பலொன்று சூட்சுமமான முறையில் செயற்பட்டுவருவதாக முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக அநுராதபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

அநுராதபுரம் புதிய பஸ்தரிப்பு நிலையம் மற்றும் பழைய பஸ் தரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் வைத்தே இச்செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் கூறினார்.

தனியார் பஸ்வண்டிகளில் கப்பம் கோரும் கும்பலொன்று ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் முறைப்பாடு செய்துள்ளனர். ஆகவே அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக