siruppiddy

8/10/13

கைக்குண்டொன்று மீட்பு மருதனார்மடம் சந்தியில்


மருதனார்மடம் சந்தியில் உள்ள கடையின் முன்னாள் இருந்து வெடிக்காத நிலையில் இன்று காலையில் கைக்குண்டொன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை வீதியில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள கடைப் பகுதியின் வாசலில் வைக்கப்பட்டு இருந்து இந்த கைக்குண்டு இன்று காலை கடையை திறக்க சென்ற வேளையில் கடை உரிமையாளரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினரான எஸ். ஹரிகரன் என்பவருடைய கடை வாசலில் இருந்து இந்த கைக்குண்டு மீட்க்கப்படடுள்ள அதே வேளையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கடை உடைக்கப்பட்டு சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் உட்பட பணமுமம் திருடப்பட்டு பொலிசார் விசாரனைகளை மேற்க்கொண்டு வரும் நிலையில் இரண்டாம் நாள் இந்த கைக்குண்டு குறிப்பி;ட்ட கடை

வாசில் வைக்கப்பட்டுள்ளமை பலத்து சந்தேகத்தை எற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக