siruppiddy

4/10/13

மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தை ஜனாதிபதி


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தால் நாட்டில் தலைதூக்கியுள்ள போதை பொருள் பாவனையை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என இலங்கை போதைபொருள் ஒழிப்புக்கான இளையோர் அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பாவனையால் நாட்டில் ஊழல், மோசடி வரையரையின்றி அதிகரித்துச் செல்வதாக கொழும்பில் இன்று (03)

இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் தெரிவித்தார். 2005 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மஹிந்த சிந்தனை ஊடாக மத்தட்ட தித்த என்ற மதுவுக்கு முற்றுப்புள்ளி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அது சரியான வகையில் செயற்படுத்தப்படவில்லை என சோபித்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
   
அதனால் தமது அமைப்பு முன்வைக்கும் இரண்டு யோசனைகளை உடன் செயற்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தலதா மாளிகையை அண்டியுள்ள 9 மதுபானசாலைகளை மூட வேண்டும். புகைத்தல் பொருள் பெட்டிகளில் சுகாதார எச்சரிக்கை விளம்பரத்தை கட்டாயப்படுத்தல் போன்ற யோசனைகளை முன்வைப்பதாக அவர் கூறினார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக