siruppiddy

21/10/14

முக்கிய புலிகளின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் கைது!

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போரின் பின்னர் இராணுவத்தினரிடம் சிக்காது யாழ்ப்பாணம், மல்லாவி பிரதேசங்களில் வசித்து வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
 குறித்த நபர்
விடுதலைப் புலிகளின் ஆயுத மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் முக்கிய பதவிகளை வகித்தவர் என்று கூறப்படுகிறது. கடந்த 18ம் திகதி கட்டாருக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது விமான நிலையத்தில் குறித்த நபரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இதேவேளை அண்மையில் வவுனியாவில் வைத்து மற்றுமொரு விடுதலைப் புலி உறுப்பினரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக