siruppiddy

1/8/13

கஞ்சா பயன்பாட்டை அந்நாட்டு பாராளுமன்ற

உருகுவேயில் கஞ்சா பாவனை சட்;ட ரீதியாக்கப்பட உள்ளது. அந்நாட்டு பாராளுமன்றில் இது தொடர்பான சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. செனட் சபையிலும் இந்த சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால், கஞ்சா பயன்பாடு முழு அளவில் சட்ட ரீதியானதாக அறிவிக்கப்படும்.உலகின் எந்தவொரு நாட்டிலும் கஞ்சாப் போதைப் பொருள் பயன்பாடு சட்ட ரீதியானதாக அறிவிக்கப்படவில்லை.  இதன்படி, கஞ்சா போதைப் பொருள் பயன்பாட்டுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கிய முதல் நாடாக உலக வரலாற்றில் உருகுவே இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளனர். புதிய சட்டத்தின் பிரகாரம் கஞ்சா  போதைப் பொருளை பயன்படுத்தவும் விற்பனை செய்யவும் அந்நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் அளிக்க உள்ளது. கஞ்சா விற்பனையாளர்களும், நுகர்வோரும் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

பதிவு செய்து கொண்டவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட மருந்தகங்களின் ஊடாக குறிப்பிட்ட வரையறையின் அடிப்படையில் கஞ்சா போதைப் பொருளை கொள்வனவு செய்யவும் விற்பனை செய்யவும் முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது. உருகுவேயில் பதினெட்டு வயதுக்கும் கூடியவர்கள் மாதாந்தம் 40 கிராம் எடையுடைய கஞ்சா போதைப் பொருளைப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக