siruppiddy

12/8/13

காணி பொலிஸ் அதிகாரங்களைச் சட்டரீதியாகவே பெற்றுக்கொள்ளலாம்

:
 
இலங்கை அரசில் சட்டரீதியகவே மாகாணங்களுக்கு காணி போலிஸ் அதிகாரங்கள் இருப்பதால் அதனை இலங்கை ஜனதிபதி வழங்கியே ஆக வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேசச் சட்டங்களுக்கே முரணாக வன்னியில் லட்சக்கணக்கான பொதுமக்களை அழித்து சாட்சியின்றி அழித்துவிட்ட இலங்கை பாசிச அரச பயங்கரவாதத்திற்திடமிருந்து அடிப்படை மனித் உரிமைகளையே மக்கள் எதிர்பார்க்காத நிலையில் விக்னேஸ்வரன் இலங்கை அரசிற்கு ஜனநாயக முகத்தை வழங்குகிறார். இதற்கு முன்னதாக இலங்கை அரசோடு பேசித் திர்த்துக்கொள்ளலாம் எனக் கூறியவரும் இவரே. இலங்கை அரசுடன் போராடியே உரிமைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு தமிழ் மக்கள் சென்றடைந்து அரை நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.
இங்கு விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலைப் பிரதினிதித்துவப் படுத்தும் ஒருவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் என்பதே வரலாறு முழுவதும் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கு எதிரான அரசியல்.இதற்கு மேல் அங்கு எதனையும் எதிர்பார்க்க முடியாது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக