siruppiddy

24/8/13

குற்றங்களை சொல்ல முனைபவர்களுக்கு அனுமதி மறுப்பு என்கிறது !!


ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் பேரவையில் இலங்கை அவமதிக்கும் வகையில் தகவல்களை முன்வைத்த அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் குழுவினருக்கு, நாளை (25) இலங்கை செல்லும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் செய்த போர் குற்றங்கள் குறித்து நவநீதம்பிள்ளைக்கு தகவல்களை தெரிவிக்கவிருந்தவர்களுக்கு அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களும், மேற்குலக தூதரங்களும் அவர் சந்திக்க வேண்டிய நபர்கள் பற்றிய முடிவுகளை எடுத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கில் உள்ள சிவில் அமைப்புகள், அரச விரோத ஊடக தரப்பினர் ஆகியோர் நவநீதம்பிள்ளையை சந்தித்து விடயங்களை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக திவயின கூறியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக