siruppiddy

12/8/13

சிங்களக் குடியேற்றப்பகுதியில் குண்டுத் தாக்குதல் : அபாய ஒலி

 
 
நாவற்குழியிலுள்ள திட்டமிட்ட சிங்களக் குடியேற்றப் பகுதிய்லேயே இத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்கு புதிதாகவரும் சிங்களக் குடியேற்ற வாசிகள் தற்காலிகமாகத் தங்கும் மடம் ஒன்றிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள குடியேறிகள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் காரில் சென்ற சிலர் குண்டுத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இச் செய்தியின் பின் புலம் பெயர் பிழைப்புவாதிகள் அடுத்தகட்ட ஈழப் போராட்டம் ஆரம்பித்துவிட்டது போன்று ஆர்ப்பரித்துக்கொள்கிறார்கள். முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கை அக்கடுப்பாட்டைப் பேணுவதற்காகவும், சிங்கள மக்கள் மத்தியிலிருந்து உயிர்க்கும் எழுச்சிகளை அடக்குவதற்காகவும் இத் தாக்குதலை இராணுவமே திட்டமிட்டு மேற்கொண்டதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகிறது. புலம் பெயர் நாடுகளின் பிழைப்பு வாதிகள் ஈழப் போராட்டம் ஆரம்பித்துவிட்டதாக மீண்டும் பண வசூலிப்பில் இறங்கினாலும் வியப்பில்லை.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக