siruppiddy

28/8/13

யாழ் நூலகத்தில் சம்பவம் !கோலம் போட்ட நவிப் பிள்ளை

:   

நேற்று முன் தினம் யாழ் நூலகத்திற்குச் சென்ற நவிப்பிள்ளை, அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பின்னர் பின் வாசலால் சென்ற விடையம் தொடர்பாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். இதேவேளை யாழ் நூலகத்திற்குள் அவர் செல்லும் வேளை அங்கே போடப்பட்டு இருந்த கோலத்தை அவர் தற்செயலாக தனது கால்களால் தட்டிவிட்டார். இதனையடுத்து உடனே குனிந்து அங்கே விலகிக் கிடந்த கோலமா மற்றும் அரிசிகளைப் பொறுக்கி அப்படியே கோலம் போட ஆரம்பித்துவிட்டார். கோலத்தை சரிசெய்த பின்னரே அவர் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றார். நவிப்பிள்ளை கோலம் போடுவதை சிங்கள அதிகாரிகளும் மற்றும் ஆளுனரும் சிரிப்போடு பார்வையிட்டார்கள்

                                   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக