siruppiddy

22/5/13

கைதுசெய்யப்பட்டுள்ள புலிகள் தாக்குதலுக்கு தயாரானார்களா?

கடந்த ஒரு வாராத்துக்குள் இந்தியாவிலும் சிறீலங்காவிலும் மூன்று முன்னால் போராளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான விபரங்கள் வருமாறு,
   தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நைரோபிக்கான விமானத்தில் பயணம் செய்ய முயற்சித்த போது குறித்த நபரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
   இலத்திரனியல் பொறியியலாளரான குறித்த நபர் வான் வழியாக இந்தியாவை அடைந்ததாக விசாரணைகளின் போது முதலில் தெரிவித்துள்ளார். எனினும், நீண்ட விசாரணைகளின் பின்னர் கடல் வழியாக தாம் இந்தியாவை அடைந்ததாகவும் நைரோபிக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
   சிறீலங்கா அரசாங்கம் குறித்த நபருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட 35 வயதான தேவ சதீஸ் குமார் எனபவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை விமான நிலையத்தில் வைத்து குறித் நபரை இந்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
   இதேவேளை, சிறீலங்கா தமிழ் இன அழிப்பு நாளான மே 18 ஐ தமது வெற்றி நாளாக கொண்டாட தயாராக இருந்த வேளை, மே 17ம் திகதி வெற்றிகொண்டாட்டங்களுக்காக அறிவிக்கப்பட்ட பகுதியான காலிமுகத்திடலுக்கு  அருகிலுள்ள கொல்லுப்பிட்டிப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினார்கள் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளின் இரு முன்னால் போராளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
   இந்த நிகழ்வில் கோத்தபாயவும் மகிந்தவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக