siruppiddy

7/5/13

சூட்டுக் காயங்களுடன் இராணுவச் சிப்பாயின் ,.,


  முல்லைத்தீவு மாஞ்சோலைப் பகுதியில் இருந்து துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் படைசிப்பாய் ஒருவரது சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
 அப்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றி வந்த சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டவராவார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 இவரது தாயைப் பகுதியின் ஊடாக குண்டு பாய்ந்து தலைப் பகுதியூடாக குண்டு வெளியே பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 இவரது மரணத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதோடு இவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக