siruppiddy

25/5/13

வடக்குத் தேர்தலை ஒத்திவைத்து அதிகாரங்களை குறைக்க முற்பட்டால்??

நிறைவேற்று அதிகாரத்தை தன்னகத்தில் வைத்துக்கொண்டு வட மாகாணசபை தேர்தலுக்கோ 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கோ அரசாங்கம் அஞ்ச வேண்டியத்தில்லை.
மாறாக வடக்கு தேர்தலை ஒத்திவைத்து மாகாண சபை முறைமயியில் அதிகாரக் குறைப்பை மேற்கொள்ள முற்பட்டால் நிலைமை மோசமடையுமென கம்யூனிஸ் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் தேவைப்படின் பாராளுமன்ற தெரிவிக்குழுவை அமைத்து மாகாணசபை அதிகாரங்கள் குறித்து பேசலாம். இது குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல.
அதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பு தொடந்தும் நம்பிக்கையை இழக்குமானால், நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு, இந்தியா உட்பட சர்வதேச சமூகம் மேலும் நெருக்கடிகளையே கொடுக்கும் நிலையேற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக