siruppiddy

16/5/13

சக்தி அமைப்பின் எச்சரிக்கை - நெருக்கடிக்குள் மஹிந்த?

 
 வட தமிழீழத்தில்  தேர்தலை நடத்தப் போவதாக அறிவித்த நாள் தொடக்கம் பல அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் எதிர்நோக்கி வருகிறதுகுறித்த தேர்தலை தடுக்க வேண்டும் என எச்சரித்துள்ளதுடன், அது தொடர்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இந்த அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

"காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், பிரபாகரன் மேற்கொண்ட பாதிப்புகளுக்கு மேலான பாதிப்புகள் ஏற்படும். இதனை மத்திய அரசாங்கத்தினால் கூட தடுக்க முடியாது போகும். 
இந்தியாவினால் பலவந்தமாக ஏற்படுத்தப்பட்டு, மக்களின் பணத்தை அழிக்கும் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை வடக்கில் மாத்திரமல்ல, எந்த மாகாணத்திலும் நடத்தக் கூடாது.

போருக்கு முன்னர், வடக்கில் வாழ்ந்த சிங்கள மக்களை அங்கு மீள்குடியேற்றாது தேர்தலை நடத்துவது சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். அதற்கு எதிராக தேசப்பற்றாளர்களை அணித்திரட்டி போராட்டம் நடத்தப்படும். 
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு, மக்களின் பணத்தில் வாழும், அமைச்சர்கள் டியூ. குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தேசத்துரோகிகளாக வடக்கில் தேர்தலை நடத்தி, அதிகாரங்களை வழங்க வேண்டும் என தெரிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அதேவேளை பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடத்தப்படுவதற்கு முன்னர், வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என இந்தியாவுக்கு அரசாங்கம் உறுதி வழங்கியதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக ஐந்தாயிரம் பேரை அழைத்துச் சென்று அந்த தீவில் குடியேற போவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்கள் தமக்கான அரசியல் அதிகாரகளைப் பெற்று வாழ்வதற்கு கூட இந்த இனவாத, கடும்போக்குவாத சிங்களவர்கள் அனுமதிக்காத போது, சமத்துவமாக வாழ்வதாக மேற்குலகை ஏமாற்றுவதில் என்ன நியாயம் இருக்கப் போகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக