siruppiddy

22/5/13

பலாலி முகாம் - சிறிலங்காவின் இலக்கு என்ன?



யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள பெரும்பாலான இராணுவ முகாம்கள் பலாலிக்கு இடம்மாற்றப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்,பாதுகாப்பு காரணகளுக்காக மூன்று இராணுவ முகாம்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் பேணப்படும் என்றும் ஏனைய அனைத்து முகாம்களும் பலாலி படைத்தளத்துக்கு மாற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சிறிலங்கா இராணுவத்தினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உணவு விடுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வட தமிழீழத்தில் தேர்தல் ஒன்றை நடத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை நடத்தவும் சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது,,,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக