siruppiddy

19/5/13

இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவுதினம்

 
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த வெற்றியின் 4 ஆண்டு தினத்தை இலங்கை அரசு கொண்டாடியது.

இந்நிலையில் இலங்கையின் முக்கிய எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டணி கட்சியினர், இறுதி கட்டப்போரில் உயிர் நீத்த தமிழர்களுக்காக வவுனியாவில் ஒன்று கூடி நேற்று அஞ்சலி செலுத்தினர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்த போரை நினைவு தினமாக யாரும் அனுசரிக்கக்கூடாது.
அப்படி அனுசரித்தால் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கொழும்பு  பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக