siruppiddy

8/5/13

தமிழீழ சுதந்திர சாசன,,,""

பிரித்தானியா - ஜேர்மனி - பிரான்ஸ் : தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான பரப்புரைகள் தீவிரம் !
 தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான பணிகள் சுறுசுறுப்படைந்துள்ள நிலையில் தமிழர்கள் பரந்து வாழுகின்ற நாடுகளில் இதற்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன.
 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவேந்தும் தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18ம் நாளன்று தமிழீழ சுதந்திர சுதந்திர சாசனம் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமையவுள்ளதோடு அமெரிக்க மண்ணில் மே 15 - 18 திகதி வரை தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடாக இது இடம்பெறுகின்றது.
 இந்நிலையில் பிரித்தானியா - ஜேர்மனி - பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பரப்புரைக்கூட்டங்கள் மற்றும் தகவல் பொதுக்கூட்டங்கள் இடம்பெறுகின்றன.
  மேற்குறித்த சந்திப்புக்களில் தமிழீழ சுதந்திர உருவாக்கத்திற்கான விளக்ககையேடு மற்றும் பொதுமக்களின் கருத்தறியும் கேள்விக்கொத்துகள் வழங்கப்படவிருக்கின்றன. பிரித்தானியா :
 (04-05-2013) சனிக்கிழமை மாலை 6:30 மணி முதல்இரவு 9:30 மணி வரை Warden, Walthomstow Quaker Meeting House/1a Jewel Road, Walthomstow, UK, LONDON E17 4QUஎனும் இடத்திலும் (06-05-2013) திங்கட்கிழமை மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை Trinity Centre, First Floor Hall, East Avenue, East ham, London E12 6SGஎனும் இடத்திலும் ,பொதுக்கூட்டங்கள் இடம்பெறுகின்றன.
 ,,,,ஜேர்மனி :
 (05-05-2013) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 11 மணிக்கு Oppelner str 130, 53119 Bonn எனும் முகவரியில் பொதுக்கூட்டம் இடம்பெறுகின்றது.
 பிரான்ஸ் :
 தமிழர்களின் வர்தக வலயத் தொகுதியான லாசப்பல் பகுதியில் மாலை 17:30 மணிமுதல் இரவு 20:00 மணி வரை தமிழீழ சுதந்திர சாசன தகவல்பரிமாற்றங்கள் தொண்டர்களால் இப்பகுதியில் வழங்கப்படவிருக்கின்றது.
 மேற்குறித்த சந்திப்புக்களில் தமிழீழ சுதந்திர உருவாக்கத்திற்கான விளக்ககையேடு மற்றும் பொதுமக்களின் கருத்தறியும் கேள்விக்கொத்துகள் வழங்கப்படவிருக்கின்றன



0 கருத்துகள்:

கருத்துரையிடுக