siruppiddy

2/5/13

சிறிலங்கா விவகாரம்: பிரித்தானிய பிரதமருக்கு,,

சிறிலங்காவில் பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன,இந்நிலையில் குறித்த மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருனுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை விவகாரங்களை கருத்திற் கொண்டு மாநாட்டை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
   பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் சில நாடுகளும் மாநாட்டை புறக்கணிக்குமாறு கோரி வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் பிரித்தானியா மாநாட்டில் பங்கேற்பது உசிதமாகாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
   கமரூன் மாநாட்டில் பங்கேற்றால் அது பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் ஆலோசனைகளை உதாசீனம் செய்ததாக அர்த்தப்படும் என மனித உரிமை செயற்பாட்டாளர் பிரட் கார்வர் தெரிவித்துள்ளார்.
  இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இன்னமும் உறுதியான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என பிரித்தானிய வெளிவிவகாரத் திணைக்களம் அறிவித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக