siruppiddy

18/6/13

இராணுவ முகாமை முற்றுகையிட்ட சுமார் 400 பேர்


  ஊட்டி வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 15க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சட்டக்கல்லூரி மற்றும் கல்லூரி மாணவிகள் 15 பேரும் அடங்குவர்.
   இந்நிலையில், இதன் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் குழுவுடன் கூடி விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
  இது குறித்து, பெரியார் தி.க.வின் ராமகிருஷ்ணன் கூறுகையில், காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் காங்கிரஸ் அமைசர்கள் எங்கு வந்தாலும் அவர்களுக்கு எதிராகப் போராட்டம் தொடரும். இது தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்று கூறினார்.
  இந்தப் போராட்டம் காரணமாக உதகை குன்னூர் சாலையில் 2 மணி நேரமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையின் இரு வழிகளிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக