siruppiddy

16/6/13

ஆட்டம் போடும் கோத்தபாய அடங்கும் காலம் நெருகிறது!



 சிங்கள மக்கள் மத்தியில் சிந்தனைப் புரட்சியை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் கோத்தபாயவை மட்டுமல்ல பேரினவாதிகளையும் தூக்கி வீசி ஏறிய முடியுமென மன்னார் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
   சிங்கள மக்கள் மத்தியில் கல்விமான்கள், சமயப்பற்றுள்ளவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்கள், தமிழர்களாகிய எங்களுடைய உண்மைநிலையை எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த உண்மை சிங்கள மக்களுக்கு ஈர்ப்பைக் கொடுக்கும்.  அதன் பின் அவர், கோத்தாவை மட்டுமல்ல பேரினவாதிகளையும் தூக்கி வீசிவிடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  இது தொடர்பில் மன்னார் ஆயார் மேலும் தெரிவிக்கையில்,
  "பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவோ அல்லது பொதுபலசேனாவோ எடுக்கும் இனவாத  அடிப்படைவாத நடவடிக்கைகள் பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ஒரு சிறு குழுவினரே. சிந்தனைப் புரட்சி ஊடாக சிங்கள மக்களைத் தெளிய வைத்து நாங்கள் எங்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்' என்று இராயப்பு ஜோசப் ஆண்டகை மேலும் தெரிவித்தார்.
  "கோத்தபாய ராஜபக்ஷ தனது பணி என்ன என்பதை மறந்து பேசுகின்றார். அடிப்படை இனவாதிகளுடன் சேர்ந்து அவர்களால் முன்னெடுக்கும் பரப்புரையை எங்களால் சிந்தனைப் புரட்சி மூலம் இல்லாது செய்ய முடியும். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
  இவர்கள் கடந்தகால வரலாறுகளை மறந்து விட்டனர். இனவாதம் பேசிக் கடந்த காலங்களில் நடந்தது என்ன என்பதை வரலாறை மீள தட்டிப் பார்க்க வேண்டும். 
  அரசியல்வாதிகளான ஜனாதிபதியும், பசில் ராஜபக்ஷவுமே மௌனம் சாதிக்கும் நிலையில் கோத்தபாய மட்டும் ஏன் தொடர்ந்தும் இனவாதம் பேசிக் கொண்டிருக்கின்றார்? இவையெல்லாம் நீண்ட காலத்துக்கு நிலைக்காது.' என்றும் மன்னார் ஆயர் குறிப்பிட்டார்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக