siruppiddy

28/6/13

இன்று வரைக்கும் அழுகின்றோம்

 

எங்களுக்காக கொஞ்சம் பேசுங்களேன் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆயிரமாயிரமாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது, சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு கேவலமாக நடத்தப்பட்டபோது எங்கே போனீர்கள்? அப்போது இந்திய அரசாங்கத்துடன் ஊடல் கொண்டிருந்தீர்களா?...
 எங்கள் முற்றங்களில்
ஓடி விளையாடிய குழந்தைகள்
இன்று உடல் சிதைந்த
புகைப்படங்களாக பார்க்கின்றோம்
புள்ளிக் கோலமிட்டு
பிட்டு அவித்து ஊட்டிய
அம்மாவின் கையில்லை -இன்று
தோளில் சுமந்து
பள்ளிக்கு கொண்டு விடும்
அப்பாவுமில்லை
கொடியேற்றி கொண்டாடினார்கள்
நங்கள் படங்குக்குடிசையில்
திண்டாடிய போது
சிரித்தார்கள்
எங்கள் தேசம்,
நாங்கள் வாழ்ந்த சொர்க்க பூமி
சுடுகாடாய் தெரிந்த போது
மானமென்ற ஒன்றுக்காய்
மடிந்த பெண்ணின்
உடலை நிர்வாண படுத்தி
புகைப்படங்கள் எடுத்து
புன்னகைத்தார்கள்
உயிர் தப்பி வந்த பெண்களை
தெரியாத பாசையில்
ஏசினார்கள்
அடித்தார்கள் ,உதைத்தார்கள்
தங்கிக் கொண்டோம்
வெறியாட்டம் ஆடி
எங்கள் வாழ்வை
பலியாக்கினார்கள்
இன்று வரைக்கும் அழுகின்றோம்
எங்களுக்காக கொஞ்சம் பேசுங்களேன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக